தமிழ்நாடு

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. இன்றைய நிலவரம் கண்டு அதிர்ச்சியில் தமிழகம்!

Published

on

தமிழகத்தில் மீண்டும் இன்று 6,352 பேருக்கும் கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் – 6,352
சென்னை – 1,285
குணமானவர்கள் – 6,045
இறப்பு – 87

கடந்த சில வாரங்களாக 6 ஆயிரத்துக்கும் குறைவான அளவே தமிழகத்தில் புதிய கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் 6,532 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,285 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று தமிழகத்தில் மொத்தம் 6,045 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 87 நபர்கள் இறந்துள்ளனர்.

குறைந்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை திடீர் என்று உயர்ந்ததுக்குப் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version