தமிழ்நாடு

தமிழகத்தில் சென்ற 24 மணி நேரத்தில் 6986 பேருக்கு கொரோனா தொற்று!

Published

on

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இன்று புதியதாகக் கண்டறியப்பட்டுள்ள 6986 பேருடன் சேர்த்து, இதுவரை தமிழகத்தில் 2,13,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுவரை தமிழகத்தில் 1,56,526 பேர் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுக் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 5,471 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்றுடன் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு பொது முடக்கம் நிறைவுக்கு வருகிறது. இந்நிலையில், சென்ற 24 மணி நேரத்தில் 85 நபர்கள் தமிழகத்தில் கொரோனா தொற்று பதிப்பால் இறந்துள்ளனர். அதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் பலி எண்ணிக்கை 3,494 ஆக அதிகரித்துள்ளது.

திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கியின் தலைமை கிளையில், 38 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே அந்த வங்கிக் கிளையில் கடந்த சில நாட்களாகப் பரிவர்த்தனைகள் செய்த வாடிக்கையாளர்கள் அனைவரையும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுத்திக்கொள்ளக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version