தமிழ்நாடு

தினமும் 20,000 குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்து தேவை: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசி மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றை பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் ஒருசிலர் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் தமிழகத்திற்கு ரெம்டெசிவிர் மருந்துகளை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்திற்கு தினமும் 7000 குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்து மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது என்றும் இது போதாது என்றும் தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதலாக 20 ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகளை ஒதுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் முக ஸ்டாலினின் கோரிக்கையை பரிசீலித்து வருவதாகவும் இது குறித்து ஆவன செய்வதாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் உறுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது எனவே தமிழகத்திற்கு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்படும் அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version