தமிழ்நாடு
தமிழகத்தில் பரவலாக மழை!
தமிழகத்தில் ஜனவரி 1,2,3 தேதிகளில் மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை மழை பெய்தது.
சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஈரப்பதம் மிக்க கடல் காற்று தமிழகத்தை நோக்கி வருகிறது. இந்தக் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக டிச.31 ஆம் தேதி லேசான மழை பெய்யலாம்.
இதே போல் தென்கரையோர மாவட்டங்களான மயிலாடுதுரை, காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். சென்னையைப் பொறுத்த அளவில் மழைக்கு வாய்ப்பில்லை. ஆனால், மேகமூட்டத்துடன் காணப்படும்’ இவ்வாறு கூறினார்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் திருச்சி, காரைக்கால், செங்கல்பட்டு, தென்சென்னை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.