Connect with us

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று முதல் அமலுக்கு வரும் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை!

Published

on

தமிழ்நாட்டில் இன்று காலை 6 மணி வரை நடைமுறையிலிருந்து வந்த ஊரடங்கு தளர்வுகள் முடிவுக்கு வந்த, கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே இன்று முதல் ஊரடங்கில் என்னவெல்லாம் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது என்று விளக்கமாகப் பார்க்கலாம்.

எதற்கெல்லாம் அனுமதி?

1) புதுச்சேரி – தமிழ்நாடு இடையிலான பேருந்து சேவைகள் தொடக்கம்.
2) ஒன்றிய மற்றும் மாநில அரசு வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேவுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இது குறித்து விவரங்களைத் தேர்வு நடத்தும் அமைப்புகள் மாவட்ட ஆட்சியர்களிடம் முன்னதாக தெரிவிக்க வேண்டும்.
3) உணவகங்கள், தேநீர்க் கடைகள், பேக்கரி, நடைபாதை கடைகள், இனிப்பு, கார வகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைக்கு உட்பட்டு 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

கடைகளுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்

1) கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் சானிடைசர் வைத்து இருக்க வேண்டும். உடல் வெப்ப நிலையை பரிசோதனைக்குப் பின்பே கடைக்குள் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வெண்டும்.
2) கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
3) ஒரே நேரத்தில் அதிக வாடிக்கையாளர்களை அனுமதிக்காமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
4) குளிர் சாதன வசதி உள்ள கடைகளில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் கடைகள் செயல்படலாம்.
5) கடைகளில் வெளியில் மக்கள் வரிசையில் காத்திருக்கும் போதும் சமூக இடைவெளியைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

இதற்கெல்லாம் அனுமதி கிடையாது

1) புதுச்சேரி நீங்கலாகப் பிற மாநிலங்கள் இடையில் தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்குத் தடை தொடர்கிறது.
2) மத்திய விமான போக்குவரத்துத் திறை அனுமதி அளித்துள்ள வழித்தடங்களை தவிரப் பிற சர்வதேச விமான போக்குவரத்துக்குத் தடை.
3) மதுக்கூடங்கள், நீச்சல் குளங்களுக்குத் தடை தொடரும்.
4) பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது.
5) பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்குத் தடை.
6) பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாது.
7) உயிரியல் பூங்காக்கள் திறக்க தடை.
8) திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி.
9) இறுதிச்சடங்கில் 20 நபர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இந்த ஊரடங்கு 19/07/2021 காலை 6 மணி வரை தொடரும்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா15 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!