தமிழ்நாடு
தமிழகத்தில் சுய ஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இன்று காலை முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு உத்தரவு நடைபெற்று வருகிறது.
இன்று தமிழகத்தில் கூடுதலாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் 7 நபர்கள் கொரோனா வைரஸ் பதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றனர்.
மறுபக்கம், இன்று நடைபெற்று வரும் ஊரடங்கு உத்தரவைத் தமிழக அரசு நாளை காலை 5 மணி வரை நீட்டித்து அறிவித்துள்ளது.
எனவே, தமிழக மக்கள் நாளை காலை 5 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த ஊரடங்கு உத்தரவு நாளையும் தொடருமோ என்று, இதனால் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்படுமே என்ற அச்சமும் நிலவி வருகிறது.