தமிழ்நாடு
அதிக விலைக்கு பத்திரங்களை விற்றால் கடும் சட்ட நடவடிக்கை: தமிழக அரசின் எச்சரிக்கை
பத்திரங்களை அதிக விலைக்கு விற்றால் உடனடியாக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசின் பதிவுத் துறை, இந்தப் பத்திரங்களை பேப்பர்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கே விற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும், இது தொடர்பாக வரும் புகார்கள் மீது அனைத்து மாவட்டப் பதிவாளர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம் எனவும் பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
பதிவுத்துறை அலுவலகங்கள் அருகில் உள்ள இடைத்தரகர்கள், பத்திரங்களை அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்கிறார்கள் என தொடர்ந்து வந்த புகார்களை அடுத்துப் பதிவுத் துறை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.