தமிழ்நாடு
சென்னையில் ‘கலைஞர் நினைவிடம்’ அரசாணை வெளியீடு
சென்னையில் கலைஞர் நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கலைஞர் நினைவிடம் மிக விரைவில் அமைவது உறுதி என்பது தெரியவந்துள்ளது
சென்னை மெரீனாவில் 39 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நினைவிடம் அமைக்க சற்றுமுன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நினைவிடம் அமைக்கப்படும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கலைஞர் நினைவிடம் அமைக்கும் பணியினை சட்டவிதிகளை பின்பற்றி மேற்கொள்ள பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார் என்றும் கலைஞர் நினைவிடம் கட்டுவதற்கான முன்மொழிவுகளை பெற்று அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்குமாறு செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
கலைஞர் நினைவிடம் அமைப்பது குறித்த அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: