வேலைவாய்ப்பு
டிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை 2024 – தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு!
தமிழக அரசு வேலை – தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் களப் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலை 12 மாத ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கப்படும் ஒரே ஒரு காலியிடமாகும். பணியிடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகும்.
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவதற்காக, விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சு அறிவு அவசியம். இதற்கான மாத சம்பளம் ரூ.20,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப முறை:
விருப்பமுள்ளவர்கள், https://Thoothukudi.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் 10.10.2024 அன்று அல்லது அதற்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு:
விண்ணப்பதாரர்கள், “மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், தூத்துக்குடி தொழில்நுட்பப் பணியாளர்கள் / களப் பணியாளர்கள் 2024” அறிவிப்பை கவனமாகப் படித்து தகுதியை உறுதி செய்துகொள்ள வேண்டும்.