தமிழ்நாடு
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது: ஆனால் இம்முறை கைது செய்தது இலங்கை கடற்படை அல்ல!
![fishermen - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/fishermen-scaled.jpg)
தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்துவருகின்றனர் என்பதும் அவர்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் 8 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை அல்ல என்றும் இந்தோனேசிய கடற்படை என்றும் வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் அந்தமான் துறைமுகத்திலிருந்து ஆழ் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென வந்த இந்தோனேசிய கடற்படையினர் சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களுடைய படகுகளையும் பறிமுதல் செய்தனர் .
இந்தோனேசியா துறைமுக பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மீனவர்களின் குடும்பத்தினர் மத்திய மாநில அரசிடம் கைது செய்யப்பட்டவர்களை மீட்டுக் கொண்டுவர வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.