தமிழ்நாடு
இன்று கவர்னர்-முதல்வர் சந்திப்பு: நீட் விலக்கு மசோதாவுக்கு விடிவுகாலம் வருமா?
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தமிழக கவர்னர் ஆர்என் ரவி அவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது என்பதும் இந்த சந்திப்பின்போது நீட் விலக்கு மசோதா குறித்து பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் நீட் விலக்கு வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய மசோதாவை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கவர்னர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பினார்.
இதனை அடுத்து சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டம் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை அதிமுக அரசு இயற்றியது என்பதும் இந்த மசோதா கவர்னருக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் விலக்கு மசோதா அனுப்பி ஒரு சில மாதங்கள் ஆகிய பின்னரும் இன்னும் கவர்னர் ஆர்என் ரவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று கவர்னர் ஆர்என் ரவி அவர்களை சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க அவர் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. இன்று பகல் 12 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.