தமிழ்நாடு
டிச.19 முதல் இதற்கு அனுமதி.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
![palanisamy-24-1503517768 (1) - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/palanisamy-24-1503517768-1-3.jpg)
தமிழகத்தில் டிசம்பர் 19 ஆம் தேதி முதல் திறந்தவெளி அரசியல், மதக்கூட்டங்கள் நடத்திக்கொள்ளலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி தரப்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்புகளின்படி, திறந்தவெளியில் சில நிபந்தனை மற்றும் வழிமுறைகளுடன், அதிகப்பட்சம் 50 சதவீதத்திற்கு அதிகமான பங்கற்பாளர்கள் மிகாமல் பொதுக்கூட்டங்கள் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு, அரசியல், மதக்கூட்டங்கள் நடத்தலாம். இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுமதி பெற வேண்டும். இதில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.
குறிப்பாக பங்கேற்பாளர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். இதற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கியுள்ளனர். தற்போது முதல்வர் பழனிசாமியும் பொதுக