தமிழ்நாடு

தமிழகத்தில் சாதிச்சாண்டை, மதச்சண்டை, அரசியல் அடாவடி கிடையாது: முதல்வர் பழனிசாமி

Published

on

தமிழகத்தில் சாதிச்சண்டை, மதச்சண்டை கிடையாது என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் அமைதியிழந்துவிடும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

ஈரோட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் மாநிலம் நன்றாக இருக்கும். அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதியாக உள்ளது. சாதிச்சண்டை, மதச்சண்டை, அரசியல் அடாவடி எதுவும் கிடையாது.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் தமிழகத்தில் கட்டப்பஞ்சாய்த்து அதிகரித்துவிடும். அது ஒரு அராஜக கட்சி. எனவே, தமிழகத்தில் அமைதி தொடர்ந்து நிலைநாட்ட வேண்டுமென்றால் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்.

அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் மக்களுக்குத் தேவையான எக்கச்சக்க திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கைத்தறி நெசவாளர்களுக்கு  300 கோடி ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதைக் காட்டிலும் மின்உபரி மாநிலமாகவே தமிழகம் உள்ளது’ இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.

Trending

Exit mobile version