தமிழ்நாடு
தமிழகத்தில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு!
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பாக நீதிமன்றங்கள் வழக்கு உள்ளது. எனவே இந்த 3 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெறாது.
அதே நேரம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் நடப்பு இடைத்தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நாடு முழுவதும் 34 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
சட்டமன்ற இடைத்தேர்தல் ஆண்டிபட்டி, பாப்பிரெட்டி பட்டி, தஞ்சை, சாத்தூர், மானாமதுரை, நிலக்கோட்டை, பெரியகுளம், பெரம்பூர், பரமக்குடி, பூந்தமல்லி, சோளிங்கர், குடியாத்தம், திருப்பூர், அரூர், ஆம்பூர், விளாத்திகுளம், திருவாரூர், ஓசூர் உள்ளிட்ட 18 தொகுதிகளில் 2019 ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது.