தமிழ்நாடு
தமிழக ராணுவ வீரர் மரணம்: நிலச்சரிவில் சிக்கியதாக தகவல்!
அசாம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் ஒருவர் இறந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அசாம் மாநிலத்தில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கிய தமிழக ராணுவ வீரர் கதிர்வேல் என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து ஆங்காங்கே நிலச்சரிவில் சிக்கி சிலர் பலியாகியும் பலர் காயம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் சற்று முன் நிகழ்ந்த நிலச்சரிவு ஒன்றில் சிக்கியதால் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கதிர்வேல் மரணமடைந்துள்ளார். இவர் மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் இறந்த மதுரை ராணுவ வீரர் கதிர்வேலின் உடல் விமானம் மூலம் இன்று இரவு 8 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் இறந்த தமிழக வீரர்கள் கதிர்வேலின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தமிழக பிரபலங்கள் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.