சினிமா செய்திகள்

படப்பிடிப்பு முடிந்து குளிக்கச் சென்ற பிரபல நடிகர் தண்ணீரில் மூழ்கி பலி!

Published

on

பிரபல மலையாள நடிகர் அணில், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள திரையுலகில் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் அணில். தற்போது ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் உருவாகி வரும் பீஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பீஸ் படத்திடன் படப்பிடிப்பு இடுக்கியிலுள்ள தொடுபுழா என்ற இடத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை படப்பிடிப்பு முடிந்ததும் தனது நண்பர்களுடன் அருகிலுள்ள மலங்காரா அணை நீர்நிலைக்கு அணில் குளிக்கச் சென்றார். அப்போது, ஆழம் தெரியாமல் சென்ற அவர், எதிர்பாரதவிதமாக தண்ணீருக்குள் மூழ்கி விட்டார்.

இதனைக் கண்ட அணிலின் நண்பர்கள் நீண்ட நேரத்திற்குப் பிறகு அவரை மீட்டனர். பேச்சு மூச்சிலாமல் கிடந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Trending

Exit mobile version