இந்தியா

டெல்லி பல்கலையில் தமிழ்ப்பாடம் நீக்கம்: குவியும் கண்டனங்கள்!

Published

on

டெல்லி பல்கலைக்கழகத்தில் இதுவரை இடம்பெற்ற தமிழ் பாடங்கள் திடீரென நீக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து தமிழறிஞர்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களான பாமா சுகிர்தராணியின் படைப்புகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர்களுக்கு தெரியாமலேயே தேர்வுக்குழு ஆலோசனைக்கு பின் பல்கலைக்கழகம் நீக்கியதாக தகவல் வெளிவந்துள்ளது

இதனை அடுத்து தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து எழுத்தாளர் சுகிர்தராணி கூறியபோது எனது படைப்புகளை டெல்லி பல்கலைக்கழகம் நீக்கியது கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் மீண்டும் டெல்லி பாடத்திட்டத்தில் தமிழ் பாடங்களை சேர்க்க வேண்டும் என்று தமிழகர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டு வருகின்றன. இந்த கோரிக்கைக்கு டெல்லி பல்கலை நிர்வாகம் செவிசாய்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version