இந்தியா
உலகின் மூத்த மொழி தமிழ் என்பது பெருமை: பிரதமர் மோடி
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள பிரதமர் மோடி, உலகின் மூத்த மொழி தமிழ் என்பது பெருமை என கூறியுள்ளார்.
பிரதமரின் பேட்டியில், “உலகின் மூத்த மொழி தமிழ் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கும் விஷயம். மாநிலங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தான் உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வரும் போது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தமிழகத்துக்குச் சீன அதிபரும், உத்திர பிரதேசத்துக்கு பிரான்ஸ் அதிபரும் அழைத்துச் செல்லப்பட்டனர். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் நாட்டின் உண்மையான வளர்ச்சி. எனவேதான் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம்.
வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம் என்றும், இந்த ஒற்றுமையை உடைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். 5 மாநில தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும்.
விவசாயிகளின் நன்மைகளுக்காகக் கொண்டு வரப்பட்ட 3 வேளான் சட்டங்களும், நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு திரும்பப் பெறப்பட்டது.
சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாக எழுந்து வரும் குற்றச்சாட்டை மறுத்த பிரதமர் மோடி, புலனாய்வு விசாரணை அமைப்புகளின் பணிகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை, அவை அவற்றின் விதிமுறைகள் படி செயல்பட்டு வருகிறன.
பஞ்சாப் மாநில பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை செய்து வருவதால் அது குறித்து மெளனம் காத்து வருகிறேன்.
இந்தியாவில் வார்சி அரசியல் ஜனநாயகத்தின் மிகப் பெரிய எதிராக உள்ளது. குறிப்பாகத் தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், உத்த பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வாரிசு அரசியலைக் காண முடிகிறது” எனவும் பிரதமர் மொடி தனது பேட்டியில் கூறினார்.