தமிழ்நாடு

கேந்திரிய வித்யாலாவில் தமிழை பயிற்று மொழியாக்க முடியாது: மத்திய அரசு

Published

on

மத்திய அரசு நடத்தி வரும் கேந்திரிய வித்யாலயாவில் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க முடியாது என மத்திய அரசு உயர் நீதிமன்ற கிளையில் வாதம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஒன்றான கேந்திர வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க முடியாது என்று மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க முடியாது என்றும் எந்த மாநிலத்தில் மத்திய அரசு பள்ளி இயங்கி வரும் அந்த மாநில மொழி பாடமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் கேந்திர வித்யாலயாவில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்றும் பயிற்று மொழியாகவும் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற கிளையில் மதுரை அரசு மத்திய அரசு வாதம் செய்துள்ளது.

தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழ் ஒரு பாடமாக உள்ளது என்றும் தமிழைப் பாடமாக பயில விரும்பும் மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் மத்திய அரசு பணியில் இருக்கும் ஊழியர்களின் குழந்தைகளை நடத்தப்படுகிறது என்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படும் போது அவர்களின் குழந்தைகள் கல்வி பாதிக்கக்கூடாது என்ற நோக்கத்திலேயே இந்த பள்ளிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version