டிவி
அடேங்கப்பா.. ரேகாவுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. *,00,000…! ஆண் போட்டியாளர்கள் தான் பாவம்!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு எவ்வளவு ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஒரு வழியாக பிக் பாஸ் சீசன் 4 நேற்று முடிவடைந்து விட்டது. இந்த சீசனில் ஆரி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். பாலாஜி ரன்னர் அப் ஆகியுள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொருக்கும் எவ்வளவு ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டிருக்கும் என்றால் அது கேள்விகுறி தான். சிலருக்கு அதிக சம்பளமும், சிலருக்கு மிகக்குறைவான சம்பளமே வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து வெளிவந்த தகவல்களின்படி, பிக் பாஸ் வீட்டில் மிகக்குறைந்த காலம் இருந்தவர் ரேகா. ஆனால், அவருக்கு சம்பளமோ நாள் ஒன்றுக்கு 1 லட்சம். வரி எல்லாம் போக 80 ஆயிரம் ரூபாய் கையில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதே போல் ஷனத்திற்கும் 1 லட்சம் ரூபாய் சம்பளம், பிடித்தம் போக 80 ஆயிரம் ரூபாய் ஆகும்.
ஆண் போட்டியாளர்களில் மிக அதிக நாட்கள் இருந்த ஆரிக்கு நாள் ஒன்றுக்கு 85 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றும், டைட்டில் வின்னர் தொகை 5 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி, சோம். இவர்களுக்கு நாளொன்றுக்கு சம்பளம் 10,000 மட்டுமே வழங்கப்படுகிறது.
ஆண் போட்டியாளர்களை ஒப்பிடுகையில் பெண் போட்டியாளர்களுக்கு தான் அதிக சம்பளம் போல் தெரிகிறது. ஆண் போட்டியாளர்களில் மூவருக்கும் நாள் ஒன்றுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், பெண் போட்டியாளர்கள் நிஷா, சம்யுக்தா, அனிதா சம்பத் மூவருக்கும் 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.