சினிமா செய்திகள்
ஆஸ்கரை வென்ற தமிழர் அருணாச்சலம் முருகானந்தத்தின் கதை!
91வது ஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு துவங்கியது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் சிகப்பு கம்பள வரவேற்புடன் ஆஸ்கர் விழா கோலாகலமாக துவங்கியது.
இந்த முறை ஆஸ்கர் விருது விழா தொகுப்பாளர் இல்லாமல் புதுவிதமாக நடத்தப்பட்டது. இந்த ஆஸ்கர் விருது விழாவில் இந்திய ஆவணப்படமான ’பீரியட் எண்ட் ஆப் செண்டன்ஸ்’ படம் ஆஸ்கர் விருதினை தட்டிச் சென்றது.
இந்திய பெண்கள் குறித்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து ராக்யா செக்தாப்சி இந்த படத்தை இயக்கியிருந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம், ஏழை பெண்களுக்காக தயாரித்த மலிவு விலை நாப்கின்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. அக்ஷய் குமாரின் பேட் மேன் படமும் அருணாச்சலம் முருகானந்தின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.