தமிழ்நாடு

சென்னை பாண்டி பஜார் தீ விபத்தில் சிக்கிய தமிழ் நடிகர்: அதிர்ச்சி தகவல்

Published

on

சென்னை பாண்டிபஜாரில் உள்ள வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அந்த தீ விபத்தில் தமிழ் நடிகர் ஒருவர் சிக்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தி நகரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வணிக வளாகம் ஒன்றில் வங்கி, பைனான்ஸ் கம்பெனி உள்பட பல நிறுவனங்கள் உள்ளன. இதில் முதல் தளத்தில் உள்ள துணிக்கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மற்ற இரண்டு தளங்களுக்கும் தீ பரவியது. இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் விரைவாக வந்து அந்த வணிக வளாகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை போராடி அணைத்தனர்.

இந்த வணிக வளாகத்தில் இருந்த ஜவுளிக்கடை மற்றும் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின் உள்ளே 50க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும் அவர்களை பத்திரமாக காப்பாற்றும் பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தீ விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தமிழ் நடிகர் ஸ்ரீ தனது குடும்பத்துடன் இந்த வணிக வளாகத்திற்குள் சென்று உள்ளதாகவும் மூன்றாவது தளத்தில் இருந்த அவர்களை தீயணைப்புத்துறையினர் காப்பாற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version