தமிழ்நாடு
தமிழகத்தில் தூய தமிழில் பேசினால் ரூ.5000 பரிசு!
![sorkuvai - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/06/sorkuvai.jpg)
தூய தமிழில் பேசுபவர்களுக்கு ரூ.5000 பரிசு வழங்குவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாகச் செந்தமிழ் சொற்பிறப்பியல் துறை திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைமுறை வாழ்க்கையில் கலப்பு சொற்கள் தவிர்த்து, தூய தமிழ் பேசுவோரிலிருந்து தேர்ந்தெடுக்கும் 3 பேருக்கு 5000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தகுதி உடையோர் www.sorkuvai.com என்ற இயணய தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நாடறிந்த இரண்டு தமிழ் பற்றாளர்களிடம் தங்களது தமிழ் பற்றை உறுதி செய்து, சான்றிதழ் பெற்று சுய விவரக் குறிப்புடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் வர வேண்டும் என்று செந்தமிழ் சொற்பிறப்பியல் துறை அகர முதல திட்ட இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.