Connect with us

இந்தியா

இந்தியாவுடன் நல்லுறவை எதிர்பார்க்கும் தலிபான்கள்.. இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

Published

on

இந்தியாவுடன் நல்லுறவை எதிர்பார்ப்பதாகத் திங்கட்கிழமை தலிபான்கள் கூறியுள்ளது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா டுடேவுக்கு பேட்டி அளித்த தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் அச்சுறுத்தலாக இருக்காது என கூறினார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் பிடித்த பிறகு என்னதான் உலகின் பல்வேறு நாடுகளும் அவர்களுக்கு எதிராக இருந்தாலும், நாங்கள் அனைவருடனும் நட்புறவுடன் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்கவே முயல்கிறோம் என்று கூறி வருகின்றனர்.

இந்தியாவுடன் தலிபானுக்கு முந்தைய ஆப்கானிஸ்தான் அரசுடன் நல்லுறவுடன் இருந்து வந்தது. ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்டவற்றைக் இந்தியா கட்டிக்கொடுத்துள்ளது. 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அங்கு முதலீடு செய்துள்ளது. எனவே தலிபான்களுக்கு பிறகு இந்தியாவுடனான ஆப்கானிஸ்தானின் உறவு மற்றும் முதலீடுகள் என்ன ஆகும் என்பது கேள்வுக்குறியாக இருந்தது.

தலிபான்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு வழங்குவதால், இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், “தலிபான்களால் எந்த நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படாது. இந்தியாவுக்கு நாங்கள் அச்சுறுத்தலாக இருக்க மாட்டோம். பிற உலக நாடுகளின் தூதரகங்களை ஆப்கானிஸ்தானில் அமைக்கக் கோரிக்கை வைக்கிறோம். இது ஆப்கானிஸ்தானுக்கு நன்மை பயக்கும். எல்லா நாடுகளுடனும் நல்லுறவுடன் இருப்பதையே தலிபான் விரும்புகிறது” என ஜபிஹுல்லா முஜாஹித் கூறினார்.

கடந்த காலங்களைப் போல இந்தியாவுடனான கலாச்சார, பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளைத் தொடர விரும்புகிறோம் என தலிபான் மூத்த தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் கூறியுள்ளார்.

மேலும், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சண்டைகளுக்கு இடையில் ஆப்கானிஸ்தான் நுழையாது. லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை நாங்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து செயல்பட அனுமதிக்கமாட்டோம்.

இந்தியா, பாகிஸ்தான் இடையில் நீண்ட கால எல்லை, அரசியல் பிரச்சனை உள்ளது. அவர்கள் இதற்காக எங்களைப் பயன்படுத்தக் கூடாது என நாங்கள் நம்புகிறோம்.

ஆப்கானிஸ்தானில் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ள இந்தியா சாலை, அணை, நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட கட்டுமான திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. இன்னும் முடிக்கப்படாத திட்டங்களை இந்தியா முடித்துக்கொடுக்க வேண்டும். இந்தியாவுடனான வர்த்தக உறவு மிகவும் முக்கியம். விமான பயணத்துக்குத் தொடர்ந்து தொடர்ந்து ஆப்கான் வான் பரப்பு திறந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் “மாறிவரும் சமன்பாடு” காரணமாக அதன் மீதான மூலோபாயங்களை மறுபரிசீலனை செய்ய இந்தியா நிர்பந்திக்கப்படுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

வணிகம்4 மணி நேரங்கள் ago

ரிலையன்ஸ் ஜியோ 5 ஜி அப்கிரேட் பிளான் இப்போது ரூ.51 முதல்! முழு விவரம்!

பிற விளையாட்டுகள்5 மணி நேரங்கள் ago

ஜான் சீனா WWE போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்! கடைசி போட்டி எப்போது?

heart attack
ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

மாரடைப்பைத் தடுக்க மருத்துவர்கள் சொல்லும் 10 வழிகள்!

பல்சுவை6 மணி நேரங்கள் ago

தேசிய மன்னிப்பு நாள்: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் தாக்கம்

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

சிவப்பு இறைச்சி உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? ஆய்வு முடிவுகள்

வணிகம்8 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை மாற்றமில்லை (07/07/2024)!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

வீட்டிலிருந்தபடியே பெண்கள் கைநிறைய பணம் சம்பாதிக்க 5 வேலைகள்!

தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஜூலை 7, 2024)

அழகு குறிப்பு17 மணி நேரங்கள் ago

முகச்சுருக்கத்தைத் தடுத்து இளமையைப் பெறுங்கள் – இயற்கை வழிமுறைகள்!

கிரிக்கெட்17 மணி நேரங்கள் ago

டி20 உலக சாம்பியன் இந்திய அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வி!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் கேப்ஜெமினி! 5000 ஐடி வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு சேர்க்கை 2024: முழு விவரம்

வணிகம்5 நாட்கள் ago

முதல் முறையாக ஜிஎஸ்டி வருவாயை அறிவிக்காத மத்திய அரசு! என்ன காரணம்?

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

NMDC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 80+

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 100+

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் சிசு இறப்பு விகிதம் 9 க்கும் கீழ் குறைத்து சாதனை!

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டங்களை தமிழில் சொல்வது எப்படி? சாமானிய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னையில் பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்: சோதனை தீவிரம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு: 8326 காலி பணியிடங்கள்!

வணிகம்1 நாள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!06-07-2024