தமிழ்நாடு
‘ரூ.6,000 தருவாங்க… வாங்கிட்டு கதையை முடிச்சிடுங்க..’- பிரபலமடையும் டிடிவி தினகரனின் பேச்சு
![TTV Dhinakaran - Edappadi Palanisamy - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/TTV-Dhinakaran-Edappadi-Palanisamy.jpg)
அமமுக, இந்த முறை தேமுதிக, ஒவைசி கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலிப் போட்டியிடுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன், நேரடியாக களம் காண்கிறார். அந்தத் தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுக சார்பில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தினகரன் கோவில்பட்டியில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல மற்ற மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அப்படி விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்ட தினகரன், ‘எடப்பாடி சொல்றாரு… ஊர்ந்து வந்து முதல்வர் பதவிய வாங்குறதுக்கு நான் என்ன பாம்பா, பல்லியான்னு… அவர் ரெண்டுமே கிடையாது. பச்நோந்தி தான் அவருக்கு ஏற்ற பெயர்.
திமுகவும் அதிமுகவும் மாறி மாறி இன்னொருவரைக் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் இருவரையும் விமர்சிக்கும் தகுதி அமமுகவுக்கு மட்டும் தான் உள்ளது.
தேர்தல் நெருங்க நெருங்க ஆளுந்தரப்புக்கு பயம் வரும். அப்போ, உங்க கிட்ட 6 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுத்து ஓட்டுப் போட சொல்லுவாங்க. வாங்கிட்டு கதையை முடிச்சி விட்ருங்க’ என்று தொண்டர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் பேசினார்.