டிவி

சீரியலில் நடிக்கிறாரா டி.ராஜேந்தர்?

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் பவித்ரா.

இப்போது ஈரமான ரோஜாவே சீரியல் முடிந்த நிலையில், தென்றல் வந்து என்னத் தொடும் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

அண்மையில் இந்த சீரியலின் ப்ரோமோ ரிலீஸ் ஆகி ஒரு பக்கம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மறுபக்கம் இதில் வரும் தாலி செண்டிமெண்ட் காட்சிகள் விமர்சிக்கவும் பட்டன.

ஆனாலும், சீரியல் தொடங்கப்பட்ட ஷூட்டிங்கும் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை பவித்ரா டி.ராஜேந்தர் உடன் இருக்கும் ஒரு படத்தைத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதை பார்த்த உடன் டி.ராஜேந்தர் சீரியலில் நடிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் அதுபற்றி உறுதியான தகவல் ஏதும் இல்லை.

டி.ராஜேந்தருக்கு சொந்தமான ஸ்டூடியோவில் தென்றல் வந்து என்னத் தொடும் சீரியல் ஷூட்டிங் நடந்து இருக்கும். அப்போது டி.ராஜேந்தருடன் புகைப்படம் எடுத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக டி.ராஜேந்தர் சில ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version