சினிமா செய்திகள்

சொந்தமா ஒரு சங்கத்தைத் தொடங்கி மனைவியை தலைவர் ஆக்கிய டி.ராஜேந்தர்!

Published

on

சினிமா துறையில் பன்முகம் கொண்ட நடிகர் டி ராஜேந்தர் தனக்குத் தானே ஒரு தயாரிப்பாளர்கள் சங்கத்தை உருவாக்கிக் கொண்டு அந்த சங்கத்துக்குத் தனது மனைவி உஷா ராஜேந்தரை தலைவராக நியமித்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்காக டி ராஜேந்தர் போட்டியிட்டார். அதில் எழுந்த பல குழப்பங்களால் சங்கத்தை விட்டே வெளியேறி தனக்கென தனியாக ஒரு தயாரிப்பாளர்கள் சங்கத்தை உருவாக்கினார் டி ராஜேந்தர். அதன் பின்னர் அந்த சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

தற்போது திடீரென தனது மனைவி உஷா ராஜேந்தரை தான் ஆரம்பித்த புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தலைவராக நியமித்துள்ளார் டி ராஜேந்தர். அந்த சங்கத்தில் தன்னை சிறப்பு ஆலோசகராவும் நியமித்துக் கொண்டார். மேலும் சங்கத்தின் தலைவரை அறிமுகப்படுத்தி இன்று செய்தியாளர்கள் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்திருந்தார் டி ராஜேந்தர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் சிம்புவின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “சிம்புவின் திருமணத்தை அந்த ஈஸ்வரன் கைகளிலேயே கொடுத்துவிட்டேன்” எனப் பதிலளித்தார் டி ராஜேந்தர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version