Connect with us

இந்தியா

புறாவின் காலில் கேமிரா, மைக்ரோ சிப்? தடயவியல் அதிகாரிகள் அதிர்ச்சி..!

Published

on

சமீபத்தில் மீனவர்களிடம் பிடிபட்ட புறா ஒன்றின் காலில் மைக்ரோ சிப் மற்றும் கேமரா போன்ற கருவிகள் இருந்ததை அடுத்து அந்த கருவிகளை தடயவியல் அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மீனவர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென புறா ஒன்று அந்த படகில் வந்து உட்கார்ந்தது. முதலில் சாதாரணமாக அந்த புறாவை பார்த்த மீனவர் அதன் பின் அதன் காலில் ஏதோ கட்டப்பட்டிருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து அந்த புறாவை அவர் பிடித்து பார்த்தபோது புறாவின் காலில் இரண்டு கருவிகள் இருந்தது போல் தெரிந்தது. அதுமட்டுமின்றி அந்த புறாவின் இறகுகளில் ஏதோ ஒரு மொழியில் எழுதப்பட்டிருந்ததும் தெரிந்தது. அந்த மீனவருக்கு ஒடியா மொழியை தவிர வேறு மொழி தெரியாததால் இது எந்த மொழி? அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை தெரியவில்லை.

இதனை அடுத்து அந்த மீனவர் கரைக்கு வந்ததும் அந்த புறாவை காவல்துறையிடம் ஒப்படைத்தார். காவல்துறையினர் அந்த புறாவின் காலில் கட்டப்பட்டிருந்த மைக்ரோ சிப் மற்றும் கேமராவை பறிமுதல் செய்து தடயவியல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர், இது வெளிநாட்டில் இருந்து உளவு பார்க்க வந்த புறாவா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட கேமரா மற்றும் மைக்ரோ சிப்பில் என்ன இருக்கிறது என்பதை அறிய மாநில தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆய்வகத்தின் அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடலோர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் இருந்து புறா ஒன்று காஷ்மீர் பகுதிக்கு வந்ததாகவும் அந்த புறாவின் காலில் மைக்ரோசிப் இருந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமும் இதே போன்ற ஒரு புறா பஞ்சாப் எல்லையில் பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசர்கள் காலத்தில் புறாவின் காலில் கடிதங்களை கட்டிவிட்டு அனுப்பும் பழக்கம் இருந்த நிலையில் தற்போது புறாவை உறவுக்கு பயன்படுத்தும் நடவடிக்கை இருப்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தியா56 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!