சினிமா செய்திகள்
மனைவி நடத்தையில் சந்தேகம்; துண்டு துண்டாக வெட்டி இயக்குநர் வெறிச்செயல்
சென்னை, பெருங்குடி குப்பை கிடங்கில் இரண்டு கால்கள், ஒரு கை ஆகியவை வெட்டப்பட்ட உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், அது யாருடைய உடல் பாகங்கள் என தெரியாமல் போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தினர்.
கடைசியாக தேடுதல் வேட்டையின் முடிவில், சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணன் என்பவர் அவரது மனைவி சந்தியாவின் நடத்தை மீது சந்தேகப்பட்டு இந்த வெறிச்செயலை செய்துள்ளது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
சில குறும்படங்கள் மற்றும் இன்னும் வெளிவராத ஒரு படத்தை இயக்கிய இயக்குநர் பாலகிருஷ்ணன், மனைவி சந்தியாவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டதாகவும், அடிக்கடி அவர்களுக்குள் இந்த விவகாரத்தில் சண்டை வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இயக்குநர் பாலகிருஷ்ணாவை கைது செய்து விசாரித்த போது, குற்றத்தை பாலகிருஷ்ணா ஒப்புக் கொண்டார்.
ஆனால், சந்தியாவின் தலை பாகம் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராட்சன் சினிமா பாணியில் கொடுர கொலைகள் சென்னை போன்ற பெரு நகரங்களிலேயே நடக்க ஆரம்பித்துள்ளது. பொதுமக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.