சினிமா

ஜெய்பீம் படத்தை பார்த்தவுடன் தோன்றியது இதுதான்! – சுசீந்தரன் டிவிட்…

Published

on

சூர்யா நடிப்பில் து.பா.சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்த படம் வரும் தீபாவளி விருந்தாக நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

சூர்யா இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து வழக்குப் பதிவு செய்யும் அவர் அந்த மக்களுக்காக வாதாடி அவர்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுத் தருவதுதான் தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

susindran

இப்படத்தை சாதாரண ரசிகர்கள் முதல் முதல்வர் ஸ்டாலின் வரை பலரும் பாராட்டியுள்ளனர். இப்படம் தங்களை அழ வைத்துவிட்டதாகவும், ஜெய்பீம் ஒரு சிறந்த சினிமா எனவும் திரையுலகினர் பலருமே சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த சுசீந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜெய்பீம் படம் பார்த்தவுடன் சந்துரு அய்யாவுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேணும் என ஆசை வந்தது. இவர் போன்ற உண்மையான மனிதரின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்கிய இயக்குனர் ஞானவேல் மற்றும் சூர்யா ஆகியோருக்கு என் மனமார்ந்த் பாராட்டுக்கள்.. ஆயிரம் நண்றிகள்.. மிகவும் சுவராஷ்யமான உன்னதமான திரைப்படம்’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version