சினிமா செய்திகள்

போனில் அசிங்கமாக திட்டினார் சுசிகணேசன்: அமலாபால் அதிரடி குற்றச்சாட்டு!

Published

on

திருட்டுப்பயலே, கந்தசாமி, திருட்டுப்பயலே 2 படங்களை இயக்கிய சுசி கணேசன், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த லீலா மணிமேகலை #MeTooவில் குற்றம் சுமத்தி இருந்தார். இது அப்பட்டமான பொய் எனக் கூறி அவர் மீது மான நஷ்ட வழக்கையும் சுசி கணேசன் போட்டுள்ளார்.

இந்நிலையில், சுசி கணேசன் இயக்கத்தில் திருட்டுப்பயலே 2ம் பாகத்தில் நாயகியாக நடித்த அமலாபால், நான் லீலா மணிமேகலைக்கு ஆதரவாக நிற்கிறேன். ஏனென்றால், சுசி கணேசன் மிகவும் தவறானவர். படப்பிடிப்பின் போது, சிலருக்கு தன்னை பாலியல் இச்சைக்காக பரிந்துரை செய்தார் மேலும், தேவையில்லாமல் என்னை உரசி உரசியே பேசுவார். இதுபோன்ற பாலியல் தொல்லைகளை அவரது படப்பிடிப்பு தளத்தில் நான் அனுபவித்தேன். எனக்கே இத்தனை தொந்தரவு என்றால், லீலா மணிமேகலையின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நான் உணர்கிறேன் என நேற்று ட்விட்டர் பதிவில் அறிக்கை வெளியிட்டார்.

மேலும், நேற்று இரவு, தனக்கு சுசி கணேசன் போன் செய்து ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும், நான் என் நிலைபாட்டை புரிய வைக்க முயலும் போது, என்னை இழிவு படுத்தியதாகவும், அவரது மனைவி மஞ்சரி அதைக் கேட்டு சிரித்ததாகவும் மற்றொரு குற்றச்சாட்டு பதிவையும் ட்விட்டரில் அமலாபால் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version