சினிமா செய்திகள்

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்!

Published

on

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலஒ வழக்கில் புதிய திருப்பமாக, சுஷாந்த் சிங்கின் தந்தை நடிகை ரியா சக்ரவர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார் அளித்துள்ளார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் பெண் தோழி ரியா சக்ரவர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டியது, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விசாரணையில், சுஷாந்தின் வங்கி கணக்கிலிருந்து ரூ.15 கோடி பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சுஷாந்தின் வங்கி கணக்கைத் தோழி மற்றும் குடும்பத்தினர் கையாண்டது அம்பலம் ஆகியுள்ளது.

சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாட்னா மத்திய பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜூன் 14 ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங், மும்பை பாந்த்ராவில் அவரது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார்.

விசாரணைக்காக பாட்னா காவல்துறையினர் மும்பை சென்றனர். இந்த வழக்கில் இதுவரைக்கும் 40 பேரின் வாக்குமூலங்களை மும்பை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version