சினிமா செய்திகள்

சிம்புவை தொடர்ந்து உதயநிதியுடன் கைகோர்க்கும் சுசீந்திரன்!

Published

on

இயக்குநர் சுசீந்திரன் ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து உதயநிதியை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளாராம்.

வேகமாகப் படம் எடுப்பதற்குப் பேர் போனவர் சுசீந்திரன். அதற்கு சமீபத்திய உதாரணம் சிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தினை 30 நாட்களுக்குள் எடுத்து முடித்தது.

ஏற்கனவே சுசீந்திரன் இயக்கி ஷிவ ஷிவா, ஏஞ்சிலினா, ஈஸ்வரன் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறன. தொடர்ந்து இப்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து புதிய படம் இயக்குகிறார் என்று கூறுகின்றனர்.

உதயநிதி ஸ்டாலினும் அரசியல் படப்பிடிப்பு என்ற பிசியாக உள்ளார். 2021 மே மாதம் தேர்தல் சமயம் என்பதால் ஒரு பக்கம் பிரச்சாரம், போராட்டம் என்று இல்லாமல் கண்ணை நம்பாதே, ஏஞ்சல், ஆர்ட்டிகள் 15 ரீமேக் என அடுத்தடுத்து படங்கள் இவர் வசம் உள்ளன.

ஆனாலும் சுசீந்திரன் வேகமாகப் படத்தை இயக்கக் கூடியவர், எனவே இவருடைய இயக்கத்தில் நடிக்க உதயநிதி ஸ்டாலின் ஒப்புக்கொண்டதாகவும் கூறுகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version