சினிமா செய்திகள்

அஜித் குறித்து நான் சொன்னது தப்புதான்: இயக்குனர் சுசீந்திரன்!

Published

on

அஜித் குறித்து அன்று நான் சொன்னது தப்பு என்று என்று உணர்கிறேன் என இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவான ’வீரபாண்டியபுரம்’ என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த விழாவில் பேசிய இயக்குனர் சுசீந்திரன் ’அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்று முன்பு ஒருநாள் நான் டுவிட்டரில் எழுதி இருந்தேன். சில சமயம் உணர்ச்சிவசப்பட்டு எதையாவது எழுதி விடுவேன். ஆனால் நன்றாக யோசித்து பார்த்தால் அஜித் ஒரு நல்ல நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அஜித் தனது குடும்பம், திரைப்படம் என அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவருக்கு அரசியல் தேவை இல்லை என்பதை இப்போது உணர்கிறேன். அரசியலுக்கு வந்துவிட்டால் நிம்மதியே இருக்காது. எனவே நான் அன்று சொன்னது தவறு என்பதை இப்போது எனக்கு புரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

அஜித் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஐஸ்வர்யா என்பவர் தயாரித்து உள்ள ’வீரபாண்டியபுரம்’ திரைப்படத்தில் ஜெய் நடிப்பு மற்றும் இசை ஆகிய இரண்டு பணிகளையும் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பிப்ரவரி 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது

 

seithichurul

Trending

Exit mobile version