கிரிக்கெட்

இந்திய அணியில் இடம் பிடித்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ராகுல் திவாட்டியா – குவியும் பாராட்டுகள்!

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும், இந்திய உள்ளூர் போட்டிகளிலும் தொடர்ந்து கலக்கி வந்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் மற்றும் ராகுல் திவாட்டியா ஆகியோருக்கு இந்திய அணியில் விளையாட வாயப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா களம் காண உள்ளது. அந்த டி20 தொடருக்குத் தான் இந்த மூவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

சூர்யகுமார் யாதவும், இஷான் கிஷானும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்கள். ராகுல் திவாட்டியா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதில் சூர்யகுமாரை இந்திய அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வெகு நாட்களாக ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது அது ஈடேறியுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான், ‘இறுதியாக காத்திருப்பு முடிவுக்கு வந்தது. சூர்யகுமார் யாதவ் வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

அவரைப் போலவே ஹர்பஜன் சிங், ‘சூர்யகுமாரை இந்திய அணியில் ஒரு வழியாக இணைந்துள்ளது மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார்.

வெகு நாட்களாக உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வந்த வேகப்பந்து வீச்சாளர் புவ்னேஷ்வர் குமார், இந்த தொடரில் இடம் பிடித்துள்ளார். அதைப் போலவே ரிஷப் பன்டும் இந்த தொடர் மூலம் டி20 கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுத்துள்ளார். இந்த கிரிக்கெட் தொடரிலிருந்து ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்திய அணிநின் டி20 அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பன்ட், இஷான் கிஷான், சாஹல், வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவாட்டியா, நடராஜன், புவ்னேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சயினி, ஷ்ராதுல் தாக்கூர்

seithichurul

Trending

Exit mobile version