சினிமா செய்திகள்

சரித்தரக் கதையில் நடிக்கும் சூர்யா.. இயக்குநர் யார் தெரியுமா?

Published

on

7ம் அறிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா மீண்டும் ஒரு சரித்திரக் கதையில் நடிக்க சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை சுப்ரமணியபுரம் இயக்குநர் சசிகுமார் இயக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகுமார் இயக்கத்தில் வெளியான முதல் படமான சுப்ரமணியபுரம் பெரும் வெற்றி பெற்றது. ஆனால், அதன்பின்னர், இயக்கத்தை விடுத்து நடிப்பில் சசிகுமார் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.

ரஜினியின் பேட்ட படத்தில் கூட மாலிக் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது அடுத்த படம் சரித்திரப் படம் என்றும், இதில், நடிக்க நடிகர் விஜய்யை தான் முதலில் அணுகியதாகவும், கால்ஷீட் பிரச்சனைகள் காரணமாக அவர் நடிக்க முடியவில்லை என்றும், தற்போது அந்த கதையை நடிகர் சூர்யா ஓகே சொல்லியுள்ளதாகவும் சசிகுமார் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

விரைவில் இந்த பிரம்மாண்ட படத்தின் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Trending

Exit mobile version