சினிமா செய்திகள்

நான் 4 மாதமாக இருக்கும்போது புனித் 7 மாதம்: சூர்யா கண்ணீர் அஞ்சலி!

Published

on

நான் நான்கு மாதமாக எனது தாயாரின் கருவில் இருக்கும்போது புனித் ராஜ்குமார் 7 மாதமாக அவரது தாயாரின் கருவில் இருந்தார் என்று தனக்கும் புனித் ராஜ்குமார் இடையே உள்ள முதல் உறவு குறித்து நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் சூர்யா இன்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் புனித் ராஜ்குமாருக்கு மரியாதை செலுத்திய பின்னர் பேட்டியளித்த நடிகர் சூர்யா, ‘இது மிகவும் துரதிருஷ்டமானது. இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கவே கூடாது. என்ன நடந்தது என்றே எங்களுக்கு புரியவில்லை.

என்னுடைய குடும்பமும் ராஜ்குமார் சார் அவர்களின் குடும்பமும் மிகவும் நெருக்கமான குடும்பம். எனது தந்தை புனித் மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். எனக்கு அம்மா சொன்னது நன்றாக ஞாபகம் இருக்கின்றது. என்னவென்றால் நான்கு மாதமாக கருவில் இருந்த போது புனித் ராஜ்குமார் 7 மாதம் கருவில் இருந்தார் என்று கூறினார். அப்படித்தான் நாங்கள் முதன் முதலில் ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டோம். இதை எங்கள் அம்மா எனக்கு பகிர்ந்தார்.

வீட்டில் அம்மா அப்பா ஆகிய இருவருக்குமே இந்த மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எந்த புகைப்படத்தில் பார்த்தாலும் புனித் ராஜ்குமார் சிரித்துக் கொண்டேதான் இருப்பார். அவர் மீது ரசிகர்கள் பொதுமக்கள் எந்த அளவுக்கு அன்பு மரியாதை வைத்திருந்தார்கள் என்பதை நான் கேள்விப் பட்டிருக்கின்றேன். அவருடைய சிரித்த புன்னகையான முகம் ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்து இருக்கும் என்று சூர்யா கூறியுள்ளார்.

Trending

Exit mobile version