சினிமா செய்திகள்

படப்பிடிப்பிற்கு வர மறுத்தாரா சூர்யா: பாண்டிராஜ் படம் குறித்து பரவும் தகவல்!

Published

on

நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பிற்கு வர மறுத்ததாக கோலிவுட்டில் வதந்தி ஒன்று பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’சூர்யா 40’. இந்த படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் மீதி படப்பிடிப்பை விரைவில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி உள்ள சூர்யா வெளியூர் படப்பிடிப்பிற்கு வருவதற்கு அச்சப்படுவதாகவும் எனவே சென்னையில் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சூர்யாவின் வசதிக்காக சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்றின் பயம் இன்னும் சூர்யாவின் மனதில் இருப்பதால் அவர் வெளிப்புற படப்பிடிப்புக்கு வர மறுப்பதாகவும், வெளிப்புற படப்பிடிப்பு என்றால் வரமாட்டேன் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதனால்தான் சூர்யாவுக்காக மீதி காட்சிகளை சென்னையிலேயே படம் எடுக்கும் திட்டத்தை படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த படத்தில் சத்யராஜ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் சூர்யாவின் பிறந்த நாளான இம்மாதம் 23ஆம் தேதி வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version