சினிமா செய்திகள்

கொரோனாவுக்கு பின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூர்யா: அட்டகாசமான போஸ்டர்

Published

on

சமீபத்தில் நடிகர் சூர்யா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பதும் அதன் பின் அவர் எடுத்துக் கொண்ட உயர்ரக சிகிச்சையின் காரணமாக கொரோனாவில் இருந்து குணமாகினார் என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து அவர் விரைவில் ’சூர்யா 40’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் சூர்யா சற்று முன் பதிவு செய்துள்ள டுவிட்டில், தான் இன்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் வகையிலான ஒரு அட்டகாசமான போஸ்டரையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி இமான் இசையும், அந்தோணி ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர். மேலும் ஜாக்சன் கலை இயக்கத்தில் அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் தயாராகி வருகிறது என்பதும் இந்த படம் இன்னும் ஒரு சில மாதங்களில் ரிலீசுக்கு தயாராகி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version