சினிமா
சூர்யாவின் ‘ஜெய்பீம்’ திரைவிமர்சனம்: இப்படி கூட படம் எடுக்க முடியுமா?
சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு ஏற்கனவே பத்திரிகையாளர் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் நேற்று வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும், இப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா என ஆச்சரியத்தில் மூழ்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜ்கண்ணு என்பவர் அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் திருடி விட்டதாக பொய்யாக வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அவருடைய மனைவி செங்கனி பழங்குடி மக்களுக்காக வாதாடி பொது சேவை செய்யும் வழக்கறிஞர் சந்துருவிடம் உதவி கேட்கிறார். இதனை அடுத்து களத்தில் இறங்கும் சூர்யா, ராஜ்கண்ணுவை மீட்டு தரும்படி நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்கிறார். இந்த மனு அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் காவல்துறையினருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதையாக உள்ளது
தமிழ் சினிமாவில் அத்தி பூத்தார் போல இது போன்ற சிறப்பான படங்கள் வெளி வருவதை ரசிகர்கள் ஆதரித்தால் தான் மேலும் இது போன்ற நல்ல தரமான திரைப்படங்கள் வெளிவரும் என்பதால் இந்த படத்தை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டியது ஒரு கடமையாகவே கருதப்படுகிறது.
ஜெய்பீம் திரைப்படத்திற்கு ஒரு ஜெய் போடலாம்