சினிமா செய்திகள்

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ அட்டகாசமான செகண்ட்லுக்!

Published

on

பிரபல நடிகர் சூர்யா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுவதை அடுத்து அவர் நடித்து வரும் 40வது திரைப்படத்தின் டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற டைட்டில் கொண்ட வீடியோ நேற்று வெளியானது என்பதும் இந்த வீடியோ தற்போது வரை டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யாவின் பிறந்த நாளுக்கான சிறப்பு பரிசாக ரசிகர்கள் இந்த வீடியோவை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூர்யா பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் செகண்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது

அட்டகாசமாகவும் ஆக்ரோஷமாகவும் கையில் வாள் வைத்துக்கொண்டு சூர்யா உட்கார்ந்து இருப்பது போன்றும் அவர் முன் பிணக்குவியல் இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரத்தினவேலு ஒளிப்பதிவில் உருவாகிவரும் இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்து வருகிறார் என்பதும் நகைச்சுவை வேடத்தில் சூரி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version