சினிமா செய்திகள்

5 மொழிகளில் வெளியாகும் ‘எதற்கும் துணிந்தவன்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் உள்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகும் என காலையில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியான நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version