சினிமா செய்திகள்
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதி இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது என்பதும் இதை அடுத்து பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம், சிவகார்த்திகேயனின் ’டான்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ உள்பட பல திரைப்படங்களை ரிலீஸ் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 10ஆம் தேதி ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார் என்பதும், டி இமான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#EtharkkumThunindhavan is releasing on March 10th, 2022!
See you soon in theatres!@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan @sooriofficial #ETfromMarch10 #ET pic.twitter.com/HPJ9cYw9Eh— Sun Pictures (@sunpictures) February 1, 2022