சினிமா செய்திகள்

லுக் மேல் லுக் கொடுக்கும் சன்பிக்சர்ஸ்: ’எதற்கும் துணிந்தவன்’ மூன்றாவது லுக்!

Published

on

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியானது என்பதும், இந்த போஸ்டர் சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து சரியாக நள்ளிரவு 12 மணிக்கு சூர்யாவின் பிறந்த நாளை அடுத்து ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் இரண்டாவது லுக் வெளியானது. இன்று காலை எழுந்தவுடன் சூர்யா ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்பதும் இன்று காலை முதல் ’எதற்கும் துணிந்தவன்’ இரண்டாவது லுக் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் மூன்றாவது லுக்கை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர். மாஸ் நடிகர் ஒருவர் நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் மூன்றாவது லுக் என அடுத்தடுத்து வெளியாகும் போது அந்த நடிகரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யா நடித்து வரும் 39வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தா.செ.ஞானவேல் என்பவர் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை சூர்யா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் இன்று முழுவதும் சூர்யா ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட் கிடைத்து வருவதால் செம குஷியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version