சினிமா செய்திகள்

’எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பில் சூர்யாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்: புகைப்படங்கள் வைரல்!

Published

on

சூர்யாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது என்பதும் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் தெரிந்ததே. மேலும் அவர் நடித்து வந்த இரண்டு படங்களின் டைட்டில் போஸ்டர்கள் நேற்று வெளியானது என்பதும் ’ஜெய்பீம்’ மற்றும் ’எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களின் போஸ்டர்கள் மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சூர்யா நடித்துவரும் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அந்த படப்பிடிப்பில் சூர்யாவும் கலந்து கொண்டுள்ளார் என்பது தெரிந்ததே.

இந்தநிலையில் நேற்று பிறந்த நாளை அடுத்து சூர்யா ’எதற்கும் துணிந்தவன்’ படக்குழுவினர் மத்தியில் பிறந்தநாளை கொண்டாடினார். அவர் கேக் வெட்டியதும் படக் குழுவில் இருந்த இயக்குனர் பாண்டிராஜ், நடிகர் சத்யராஜ், நடிகைகள் சரண்யா பொன்வண்ணன், ப்ரியங்கா அருள்மோகன் உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் படக்குழுவினர்களுடன் சூர்யா பிறந்தநாள் கொண்டாடுவதை பார்க்க ஜோதிகாவும் படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்திருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது சூர்யா பிறந்தநாள் கேக் வெட்டிய புகைப்படங்கள் அவருக்கு படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை எட்டி விட்டதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கும் உள்ள ’வாடிவாசல்’ திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version