ஆன்மீகம்

சூரிய பகவான் பெயர்ச்சி – செப்டம்பரில் பணமழை பொழியப்போகும் ராசிகள்!

Published

on

தற்போது சூரிய பகவான் சிம்ம ராசியில் இருக்கிறார், அங்கு அவர் தனது சொந்த வீட்டில் வசித்து வருகின்றார். செப்டம்பர் 16ஆம் தேதி சூரியன் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாக இருப்பார், இது கன்னி சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. இந்த பெயர்ச்சி பல ராசிகளுக்கு நன்மை மற்றும் செல்வாக்கான காலத்தைத் தரவுள்ளது.

மேஷம்: சூரியன் 6-ஆம் வீட்டில் இருக்கிறார், இது மேஷ ராசிக்காரர்களுக்கு அரசு தொடர்பான வேலைகளில் வெற்றியை தரும். புதிய முதலீடுகள் மற்றும் பணவரவு அதிகரிக்கும், குறிப்பாக பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முதலீடுகள் செய்வீர்கள்.

கன்னி: சூரியன் கன்னி ராசியில் நுழைய இருப்பதால், நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். சூரியன் 4-ஆம் வீட்டில் இருப்பதால் தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. ஆனால், புகழ், செல்வம் ஆகியவை கிடைக்கும்.

கடகம்: கடகம் ராசிக்காரர்களுக்கு நல்ல பணவரவு கிடைக்கும். உங்கள் வார்த்தைகளால் கௌரவம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் மற்றும் சமூகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்மம்: சூரியன் 2-ஆம் வீட்டில் நுழைய இருப்பதால் செல்வம், குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும் மற்றும் பங்குச் சந்தையில் லாபம் ஈட்டுவீர்கள்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் பல புதிய முயற்சிகளை துவக்கி, லாபம் காணும் சூழலில் இருப்பார்கள். சூரியன் 11-ஆம் வீட்டில் இருப்பதால், தொழிலில் அதிக வெற்றியை காண முடியும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சியால் மிகுந்த பண வரவை அனுபவிக்க முடியும். புதிய சொத்துகளை வாங்கி, உறவுகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். 9 மற்றும் 10-ஆம் வீட்டில் இருக்கும் சூரியன் தர்மகர்மாதிபதி யோகத்தை உருவாக்கி வாழ்க்கையில் முன்னேற்றத்தை அளிக்கும்.

 

Poovizhi

Trending

Exit mobile version