சினிமா செய்திகள்

’விருமன்’ படப்பிடிப்பு நிறைவு: மாறி மாறி நன்றி தெரிவித்து கொண்ட சூர்யா-கார்த்தி!

Published

on

கார்த்தி நடிப்பில் சூர்யா தயாரிப்பில் உருவாகி வந்த ’விருமன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் டுவிட்டரில் மாறி மாறி நன்றி செலுத்தி கொண்டனர்.

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவான ’விருமன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மதுரை, தேனி பகுதியில் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்தது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் படக்குழுவினர்கள் எடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’விருமன்’ படப்பிடிப்பு முடிவடைந்தது குறித்து நடிகர் கார்த்திக் தனது டுவிட்டர் பக்கத்தில் ’மிகச் சிறந்த வகையில் திட்டமிட்டு படத்தை இயக்கிய முத்தையா அவர்களுக்கும் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் அவர்களுக்கும் நன்றி என்றும் அதிதிங்கருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் இந்த ’விருமன்’ பயணம் மிகச்சிறந்த சந்தோசமான பயணங்கள் ஆக உங்களுக்கு இருந்திருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று அவர் தெரிவித்ததோடு தயாரிப்பாளர் சூர்யாவுக்கு தனது நன்றி என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள சூர்யா, ‘நன்றி ஹீரோ சார்’ என்றும் இயக்குனர் முத்தையா மற்றும் அவருடைய குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை நாயகி அதிதி சங்கரும் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார். நடிகையாக வேண்டும் என்ற தனது பல நாள் கனவு தற்போது நிறைவேறி விட்டதாகவும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version