சினிமா செய்திகள்
15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜோடி சேரும் சூர்யா- ஜோதிகா… கதை எழுதிய பெண் இயக்குநர்!
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியர் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நட்சத்திர தம்பதியரான சூர்யாவும் ஜோதிகாவும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் 2006-ம் ஆண்டில் சில்லுனு ஒரு காதல் என்னும் திரைப்படத்தில் இணைந்து ஜோடியாக நடித்திருந்தனர். அதன் பின்னர் திருமணம், குழந்தைகள் என விலகி இருந்த ஜோதிகா மீண்டும் சூர்யாவின் தயாரிப்பில் சினிமாவுக்குள் நுழைந்தார். ஆனாலு, இருவரும் ஜோடியாக சேர்ந்து நடிக்கவில்லை.
ஆனால், தற்போது சூர்யா- ஜோதிகா இருவரும் ஜோடியாக ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்களாம். இந்தப் படத்தை பெண் இயக்குநரான ஹலீதா சமீம் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. சூர்யாவின் 2டி ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் கடந்த ஆண்டு வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படத்தின் இயக்குநர் தான் ஹலீதா. இவரது இரண்டாவது படமான வருகிற பிப்ரவரி 12-ம் தேதி சமுத்திரகனி நடிப்பில் ‘ஏலே’ திரைப்படம் வெளியாக உள்ளது.
ஹலீதாவின் கதையையும் இயக்கத்தையும் சூர்யா- ஜோதிகா தம்பதியர் சில்லுக்கருப்பட்டி படத்திலேயே வெகுவாகப் பாராட்டி உள்ளார்கள். அப்போது தான் சூர்யா தனக்கும் ஜோதிகாவுக்கும் சேர்ந்து நடிப்பது போன்ற கதை இருந்தால் உங்கள் இயக்கத்தில் நடிக்கத் தயார் எனச் சொல்ல தற்போது ஹலீதா முழுவீச்சில் கதையைத் தயார் செய்து விட்டாராம்.