சினிமா செய்திகள்

பாலாவுடன் திடீர் மோதலா? பேக்கப் சொல்லி கிளம்பி சென்றாரா சூர்யா?

Published

on

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 41’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாகவும் பேக்கப் சொல்லிவிட்டு சூர்யா படப்பிடிப்பில் இருந்து கிளம்பி விட்டதாகவும் கூறப் படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் பாலா எப்போதுமே படப்பிடிப்பின்போது நடிகர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார் என்று கூறப்படுவதுண்டு. இந்த நிலையில் சூர்யாவிடம் பாலா கடுமையாக நடந்து கொண்டதாகவும் இதனால் படப்ப்பிடிப்பு தளத்தில் இருந்து சூர்யா வெளியேறி விட்டதாகவும் இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு நின்று விட்டதாகவும் கூறப்படுகிறது .

ஆனால் அதே நேரத்தில் சொன்ன நேரத்தில் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என சூர்யா வலியுறுத்தியதாகவும் அதற்கு பாலா கோபமாகப் பேசியதால் தான் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் ஒரு சிலர் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் படத்தின் பணிகள் இருப்பதால் தான் அவர் திடீரென மும்பை கிளம்பி சென்றதாகவும், சூர்யாவுக்கும் பாலாவுக்கும் எந்தவிதமான கருத்துவேறுபாடும் இல்லை என்றும் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்கு செட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் படக்குழுவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

 

seithichurul

Trending

Exit mobile version