சினிமா செய்திகள்

சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு: அவரே பதிவு செய்த டுவீட்!

Published

on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவரே தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மனித குலத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. அந்த வகையில் ஏழை எளிய மக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் பிரமுகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே விஷால், தமன்னா உள்பட பல திரையுலக பிரமுகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ள நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்’ என்று பதிவு செய்துள்ளார்.

சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் அறிந்ததும் திரையுலகினர் அவர் விரைவில் குணமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் நீங்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் பல பிரமுகர்கள் சூர்யா விரைவில் குணமாக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version